செய்திகள்விளையாட்டு

நியுசிலாந்து நான்காவது ஒருநாள் போட்டியில் எளிதான வெற்றி

நியுசிலாந்தில் தற்போது ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நான்காவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியுசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்தியா அணியில் இதுவரை எவரும் நிலைத்து நின்று ஆடவில்லை. 20 ஓவர்களின் முடிவில் இந்தியா 55/8 என்று ஆடி வருகிறது.

அதிக பட்சமாக சாகல் ஆட்டமிழக்காமல்  18 ரன்களும் , ஹர்திக் பாண்ட்யா 16 ரன்களும் குல்திப் யாதவ் 15 ரன்களும்,  ஷிகர் தவான் 13 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோஹித் ஷர்மா 7, தினேஷ் கார்த்திக் 0, சுப்மன் கில் 9, அம்பத்தி ராயுடு 0, கேதார் ஜாதவ் 1 ரன்களை மட்டுமே எடுத்தனர். நியுசிலாந்து அணியில் போல்ட் 5 விக்கெட்டுகளையும், கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்க்சை ஆடிய நியுசிலாந்து 14.4 ஓவர்களில் வெற்றி இலக்கான  93 ரன்களை 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எளிதாக வெற்றி பெற்றது. டெய்லர் ஆட்டமிழக்காமல் 37 ரன்களையும், நிக்கோலஸ் ஆட்டமிழக்காமல் 30 ரன்களும் எடுத்தனர்.  இதன் மூலம் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் உள்ளது. ஏற்கனவே இந்தியா தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 26 times, 1 visits today)
Tags

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close