இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு
ஸ்ரீ விகாரி வருஷம் சித்திரை மாதம் 30ஆம் நாள், மே 13ஆம் தேதி திங்கட்கிழமை
நவமி திதி மதியம் 2.24 வரை பிறகு தசமி
மகம் நக்ஷத்திரம் காலை 9.39 வரை பிறகு பூரம்
ராகுகாலம் : காலை 7.30 – 9.00
எமகண்டம் : காலை 10.30 – 12.00
நல்ல நேரம்: காலை 6.30 – 7.30 மாலை 3.30 – 4.30
சூலம் : கிழக்கு
ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:
அஸ்வதி:
காலை 9.39 வரை:
தொழிலில் லாபம் இருக்கும். செல்வாக்கு கூடும் நாள். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகைச் சூடுவார்கள். பணவரவு இருக்கும் நாள்.
காலை 9.39க்குப் பிறகு:
அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நீண்ட நாள் வாட்டிய பிரச்சனை முடிவுக்கு வந்து நிம்மதி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகை சூடுவார்கள்.
பிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பரணி:
காலை 9.39 வரை:
முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும்.
காலை 9.39க்குப் பிறகு:
வியாபாரத்தில் லாபகரமான செய்தி வரும். புதிய ஒப்பந்தம் ஒன்றைப் பேசி முடிப்பீர்கள். நல்ல செய்திகள் வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.
அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
கார்த்திகை:
காலை 9.39 வரை:
அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த நல்ல செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும்.
காலை 9.39க்குப் பிறகு:
அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிட்டும். தொழில்துறையினருக்கு நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகை சூடுவார்கள்.
முருகனை வழிபட அல்லல்கள் தீரும், நன்மை பெருகும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.
ரோகிணி:
காலை 9.39 வரை:
பயணங்களின் போது கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். பிறர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். யாருக்கும் வாக்கு/ஜாமீன் கொடுக்க வேண்டாம். குறிப்பாக பேச்சில் கவனம் தேவை. உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.
காலை 9.39க்குப் பிறகு:
முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். விரும்பிய பணிமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள்.
அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
மிருகசீர்ஷம்:
காலை 9.39 வரை:
எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நல்ல திட்டம் ஒன்று தீட்டுவீர்கள். அதில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கதவு தட்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சமூகத்தில் செல்வாக்கு கூடும் நாள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
காலை 9.39க்குப் பிறகு:
மறதியால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்பிருப்பதால் முக்கிய விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். பயணங்களில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் அவசியம். அலைச்சல் இருக்கும்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நலம் சேர்க்கும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
திருவாதிரை:
காலை 9.39 வரை:
முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். விரும்பிய பணிமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள்.
காலை 9.39க்குப் பிறகு:
புதிய ஆடை, தங்க நகை/நாணயம் வாங்கிச் சேர்ப்பீர்கள். நீண்டநாளைய ஆசை ஒன்று பூர்த்தியாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு மூலம் குடும்ப விஷயங்கள், சுப நிகழ்வுகள் குறித்த நல்ல முடிவுகள் வந்து அதனால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிய வீடு, ஃப்ளாட், இடம் ஏதாவது ஒன்று முன்பதிவு செய்ய அல்லது வாங்க வாய்ப்புள்ளது.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
புனர்பூசம்:
காலை 9.39 வரை:
நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும். பண வரவு இருக்கும்.
காலை 9.39க்குப் பிறகு:
பயணங்களில் கவனம் அவசியம். வெளி இடங்களில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும். அரசியல் விமர்சனம், கருத்து விவாதம் ஆகியவை சிக்கல்களை அதிகரிக்கும்.
தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீர்ந்து நலம் பெருகும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பூசம்:
காலை 9.39 வரை:
அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணம் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும். உடல் நிலை சோர்வடையும். கவனம் தேவை.
காலை 9.39க்குப் பிறகு:
எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் விரும்பிய பணி/இட மாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள். பணம் வரும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கிச் சீரான நாளாக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ஆயில்யம்:
காலை 9.39 வரை:
அலுவலகத்தில் பதவி, ஊதிய உயர்வு குறித்த செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள். பழைய கடன்பாக்கி வசூலாகும். மொத்தத்தில் மனமகிழ்ச்சியான நாள்.
காலை 9.39க்குப் பிறகு:
அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணம் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும். கவனம் தேவை. பேச்சில் கவனம் அவசியம்.
ஸ்ரீதுர்க்கையை வழிபட நன்மைகள் பெருகும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
மகம்:
காலை 9.39 வரை:
வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்
காலை 9.39க்குப் பிறகு:
எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
கணபதி வழிபாடு நன்மைகள் சேர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.
பூரம்:
காலை 9.39 வரை:
நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். கூடுதல் பொறுப்புகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறுவீர்கள்.
காலை 9.39க்குப் பிறகு:
பணம் வரும் நாள். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்காலத்திட்டம் ஒன்று தீட்டுவீர்கள். அது வெற்றிகரமாக அமையும்.
அம்பாள் வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
உத்திரம்:
காலை 9.39 வரை:
எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள்.நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
காலை 9.39க்குப் பிறகு:
புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக அமையும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி வாய்ப்பு தேடி வரும். கலைஞர்கள் பாராட்டப்படுவார்கள். உயர்கல்விக்கு விண்ணப்பித்திருப்போருக்கு கல்வி உதவித் தொகை கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு கூடும்.
சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ஹஸ்தம்:
காலை 9.39 வரை:
பயணத்தில் கவனம் தேவை. ஜாமீன் கொடுப்பது, கடன் கொடுப்பது இதெல்லாம் வேண்டாம். உறவினர் நண்பர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடமும் சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.
காலை 9.39க்குப் பிறகு:
எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். சமுதாயத்தில் மதிப்பு உயரும் நாள். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும் நாளாக உல்ளது.
அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி சிறப்புகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
சித்திரை:
காலை 9.39 வரை:
பயணங்களில் கவனம் அவசியம். வெளி இடங்களில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும். அரசியல் விமர்சனம், கருத்து விவாதம் ஆகியவை சிக்கல்களை அதிகரிக்கும். அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். கடன் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம்.
காலை 9.39க்குப் பிறகு:
புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம். மனக்குழப்பங்கள் ஏற்படும் நாளாக இருப்பதால் நன்கு யோசித்துச் செயல்படவும். பெரியோரிடம், குறிப்பாக தாய் தந்தையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
ஸ்வாதி:
காலை 9.39 வரை:
உடல் நலனில் கவனம் தேவை. கூரிய பொருட்களைக் கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. பெரியோரிடம், குறிப்பாக தகப்பனாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். இயந்திரப் பணியாளர்கள் வேலையில் கவனம் தேவை. அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.
காலை 9.39க்குப் பிறகு:
கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த நல்ல செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள். பணம் வரும் நாள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
விசாகம்:
காலை 9.39 வரை:
எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். சமுதாயத்தில் மதிப்பு உயரும் நாள். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும் நாளாக உல்ளது.
காலை 9.39க்குப் பிறகு:
அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணம் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும். உடல் நிலை சோர்வடையும். கவனம் தேவை.
முருகனை வழிபட அல்லல்கள் அகன்று நலம் பெறலாம். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.
அனுஷம்:
காலை 9.39 வரை:
வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். நீண்ட நாள் தொல்லை கொடுத்துவந்த பிரச்சனைகள் தீரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். விளையாட்டுத்துறையினர் வெற்றி வாகைச் சூடும் நாளாகத் தெரிகிறது.
காலை 9.39க்குப் பிறகு:
புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக அமையும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி வாய்ப்பு தேடி வரும். கலைஞர்கள் பாராட்டப்படுவார்கள். விருது கிடைக்க வாய்ப்புண்டு. உயர்கல்விக்கு விண்ணப்பித்திருப்போருக்கு கல்வி உதவித் தொகை கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். எதிர்கால நன்மைக்கான நல்ல அடிப்படை இந்நாளில் அமைய வாய்ப்புண்டு.
ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களை நீக்கி நல்ல நாளாக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.
கேட்டை:
காலை 9.39 வரை:
எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
காலை 9.39க்குப் பிறகு:
பயணங்களில் கவனம் அவசியம். வெளி இடங்களில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும். அரசியல் விமர்சனம், கருத்து விவாதம் ஆகியவை சிக்கல்களை அதிகரிக்கும்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
மூலம்:
காலை 9.39 வரை:
வராக்கடன் வசூலாகும். சுபச்செலவுகள் ஏற்படும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். இழுபறியில் இருந்த வேலைகள் சுமுகமாக முடியும். சமூகத்தில் செல்வாக்கு கூடும்.
காலை 9.39க்குப் பிறகு:
நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும் நாள்.
பிள்ளையார் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பூராடம்:
காலை 9.39 வரை:
குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும்
காலை 9.39க்குப் பிறகு:
எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் விரும்பிய பணி/இட மாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும். பணவரவு இருக்கும்.
அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
உத்திராடம்:
காலை 9.39 வரை:
நீண்ட நாள் பாக்கி வசூலாகும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
காலை 9.39க்குப் பிறகு:
கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த நல்ல செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும். பணம் வரும். பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஆடை அணிகலன்கள் சேரும் நாள்.
சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கி நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
திருவோணம்:
காலை 9.39 வரை:
பிறர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். பயணங்களின் போது கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அரசியல் கருத்துக்களை நேரிலோ, சமூக வலைத்தளங்களிலோ பேசுவதைத் தவிர்க்கவும்.
காலை 9.39க்குப் பிறகு:
போட்டித் தேர்வுகளில், நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். பயணங்களால் நன்மை ஏற்படும். நண்பர்கள் உதவி கிட்டும். வேலைக்காகக் காத்திருப்போருக்கு வேலை குறித்த நல்ல செய்தி வரும்.
அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி சிறப்புகளைச் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
அவிட்டம்:
காலை 9.39 வரை:
உடல் நலனில் கவனம் அவசியம். உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்கு வாதம் வேண்டாம். அவசியமற்ற விஷயங்களில் கருத்துச் சொல்ல வேண்டாம். வாக்கு கொடுப்பது தேவையில்லை.
காலை 9.39க்குப் பிறகு:
உடல் நலனில் கவனம் தேவை. பெரியோரிடம், குறிப்பாக தகப்பனாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். தடுமாற்றங்கள் இருக்கும் நாளாகத் தெரிவதால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படவும். அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.
ஸ்ரீ துர்க்கை வழிபாடு அல்லல்களை நீக்கி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
சதயம்:
காலை 9.39 வரை:
எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். சமுதாயத்தில் மதிப்பு உயரும் நாள். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும் நாளாக உல்ளது.
காலை 9.39க்குப் பிறகு:
அலுவலகத்தில் வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். மகனுக்கோ மகளுக்கோ திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமான செய்தி வரும்.
ஸ்ரீ துர்க்கை வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
பூரட்டாதி:
காலை 9.39 வரை:
போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். நேர்முகத் தேர்வில் சாதகமான முடிவுகள் இருக்கும். தங்கம், வெள்ளி நகை, பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு திருமணம் கைகூடிவர வாய்ப்புள்ளது. குழந்தைப்பேறு எதிர்பார்த்திருப்போருக்கு நற்செய்தி வரும்.
காலை 9.39க்குப் பிறகு:
உடல் நலனில் கவனம் தேவை. கூரிய பொருட்களைக் கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. பெரியோரிடம், குறிப்பாக பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். இயந்திரப் பணியாளர்கள் வேலையில் கவனம் தேவை. அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.
தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீரும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
உத்திரட்டாதி:
காலை 9.39 வரை:
எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். புண்ணியத் தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள். பணம் வரும் நாள். புதிய ஒப்பந்தம் கைகூடும்.
காலை 9.39க்குப் பிறகு:
போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி வாய்ப்பு தேடி வரும். உயர்கல்விக்கு விண்ணப்பித்திருப்போருக்கு எதிர்பார்த்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக அமையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைஞர்கள் பாராட்டப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு கூடும்.
சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ரேவதி:
காலை 9.39 வரை:
ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்காலத்திட்டம் ஒன்று தீட்டுவீர்கள்.
காலை 9.39க்குப் பிறகு:
புதிய முயற்சிகள் வேண்டாம். இயந்திர சாதனங்களில் பணியாற்றுவோருக்கு கவனம் தேவை. பயணங்களில் கவனம் அவசியம். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
ஸ்ரீ துர்க்கை வழிபாடு நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
ஸ்ரீ மாத்ரே நம:
சுபம்
𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎