இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு
ஸ்ரீ விகாரி வருஷம் வைகாசி மாதம் 2ஆம் நாள், மே 16ஆம் தேதி வியாழக்கிழமை
த்வாதசி திதி காலை 7.40 வரை பிறகு த்ரயோதசி (பிரதோஷம்)
ஹஸ்தம் நக்ஷத்திரம் காலை 4.50 வரை பிறகு
ராகுகாலம் : மதியம் 1.30 – 3.00
எமகண்டம் : காலை 6.00 – 7.30
நல்ல நேரம்: காலை 10.30 – 11.30
சூலம் : தெற்கு
ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:
அஸ்வதி:
அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நீண்ட நாள் வாட்டிய பிரச்சனை முடிவுக்கு வந்து நிம்மதி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகை சூடுவார்கள்.
பிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பரணி:
எடுத்த முயற்சிகள் கைகூடும். விரும்பிய பணிமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள்.
அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
கார்த்திகை:
மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். பணிச்சுமை கூடும் நாளாக உள்ளது. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம். தொழிற்சாலைகளில் குறிப்பாக இயந்திரங்களில் பணியாற்றுவோர் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
முருகனை வழிபட அல்லல்கள் தீரும், நன்மை பெருகும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.
ரோகிணி:
பணம் எதிர்பாராத வகையில் வரும். பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். நினைத்த காரியம் நடந்தேறும். தொழிலில் நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடுவீர்கள்.
அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
மிருகசீர்ஷம்:
யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நலம் சேர்க்கும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
திருவாதிரை:
உறவினர், நண்பர்களிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்டகாலக் கடன்பாக்கி வசூலாகும். விற்பனைப் பிரதிநிதிகள் இலக்கை எளிதாக எட்டுவர். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உடல்நிலையில் புது உற்சாகம் தென்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி அதன் மூலம் நல்ல லாபம் கிட்டும்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
புனர்பூசம்:
அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நீண்ட நாள் வாட்டிய பிரச்சனை முடிவுக்கு வந்து நிம்மதி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகை சூடுவார்கள்.
தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீர்ந்து நலம் பெருகும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பூசம்:
மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். பணிச்சுமை கூடும் நாளாக உள்ளது. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம். தொழிற்சாலைகளில் குறிப்பாக இயந்திரங்களில் பணியாற்றுவோர் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கிச் சீரான நாளாக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ஆயில்யம்:
நீண்ட நாள் இழுபறியான ஒரு விஷயம் குறித்து நல்ல முன்னேற்றமான தகவல் வரும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.
ஸ்ரீதுர்க்கையை வழிபட நன்மைகள் பெருகும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
மகம்:
கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். அலுவலகத்தில் பதவி, ஊதிய உயர்வு குறித்த செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள்.
கணபதி வழிபாடு நன்மைகள் சேர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.
பூரம்:
அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்
அம்பாள் வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
உத்திரம்:
யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம்.உடல் நலனில் கவனம் அவசியம்.
சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ஹஸ்தம்:
அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிட்டும். தொழில்துறையினருக்கு நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகை சூடுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும்.
அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி சிறப்புகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
சித்திரை:
பயணங்களில் கவனம் தேவை. காரியத் தடை, பேச்சுவார்த்தைகளில் இழுபறி, அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கவனம் அவசியம். வாக்குவாதம் வேண்டாம். பொதுப்பணிகள், அரசியல் குறித்து சமூக ஊடகங்களில் வாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் வேண்டாம். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
ஸ்வாதி:
எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள்.நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
விசாகம்:
மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பண வரவு குறித்த செய்தி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு கூடும். குடும்பத்துடன் குதூகலமாக நேரம் கழிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
முருகனை வழிபட அல்லல்கள் அகன்று நலம் பெறலாம். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.
அனுஷம்:
பயணங்களில் கவனம் அவசியம். வெளி இடங்களில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும். அரசியல் விமர்சனம், கருத்து விவாதம் ஆகியவை சிக்கல்களை அதிகரிக்கும்.
ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களை நீக்கி நல்ல நாளாக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.
கேட்டை:
கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். அலுவலகத்தில் பதவி, ஊதிய உயர்வு குறித்த செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
மூலம்:
பயணங்களில் கவனம் அவசியம். வெளி இடங்களில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும். அரசியல் விமர்சனம், கருத்து விவாதம் ஆகியவை சிக்கல்களை அதிகரிக்கும். எச்சரிக்கை அவசியம். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம்.
பிள்ளையார் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பூராடம்:
மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பண வரவு குறித்த செய்தி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு கூடும். குடும்பத்துடன் குதூகலமாக நேரம் கழிப்பீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
உத்திராடம்:
உடல் நலனில் கவனம் தேவை. கூரிய பொருட்களைக் கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. பெரியோரிடம், குறிப்பாக பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். இயந்திரப் பணியாளர்கள் வேலையில் கவனம் தேவை. அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.
சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கி நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
திருவோணம்:
கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். அலுவலகத்தில் பதவி, ஊதிய உயர்வு குறித்த செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள்.
அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி சிறப்புகளைச் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
அவிட்டம்:
உடல் நலனில் கவனம் அவசியம். உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்கு வாதம் வேண்டாம். அவசியமற்ற விஷயங்களில் கருத்துச் சொல்ல வேண்டாம். வாக்கு கொடுப்பது தேவையில்லை. பயணங்களில் எச்சரிக்கை அவசியம்.
ஸ்ரீ துர்க்கை வழிபாடு அல்லல்களை நீக்கி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
சதயம்:
போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி வாய்ப்பு தேடி வரும். உயர்கல்விக்கு விண்ணப்பித்திருப்போருக்கு எதிர்பார்த்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக அமையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைஞர்கள் பாராட்டப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் செல்வாக்கு கூடும்.
ஸ்ரீ துர்க்கை வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
பூரட்டாதி:
ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீரும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
உத்திரட்டாதி:
அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணம் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும். கவனம் தேவை. பேச்சில் கவனம் அவசியம்.
சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ரேவதி:
பணம் வரும் நாள். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
ஸ்ரீ துர்க்கை வழிபாடு நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
ஸ்ரீ மாத்ரே நம:
சுபம்
𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎