சினிமாசெய்திகள்

நடிகை கோவை சரளா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்

நடிகை கோவை சரளா தன்னை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக் கொண்ட கோவை சரளா, தாம் கமல் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும், தன்னால் இயன்ற சமூக சேவை செய்யவும் மக்கள் நீதி மய்யத்தில் இணைவதாகத் தெரிவித்துள்ளார்.

 

கமலின் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளது. இதுவரை வேறெந்த கட்சியுடனும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கவில்லை. கெஜ்ரிவால் மட்டும் மக்கள் நீதி மய்யத்திற்கு தமது ஆதரவு உண்டு என்று அறிவித்துள்ளார்.

(Visited 35 times, 1 visits today)
0
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close