செய்திகள்பொருளாதாரம்

சேம நல நிதி வட்டி உயருகிறது. –

Employee Provident Fund – ஊழியர்கள் சேம நல நிதி வட்டி விகிதம் 8.55% லிருந்து 8.65% ஆக உயருகிறது.

சென்ற ஆண்டு 8.55% ஆக இருந்த சேம நல நிதி வட்டி 8.65% ஆக உயருகிறது.

வங்கிகளின் வைப்புநிதி வட்டி 6-7% அளவில் இருக்கிறது. இருவாரங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை 25 பாயிண்ட்கள் குறித்திருக்கும் நிலையில் வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது பி எஃப் வட்டி விகித உயர்வு மாத வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

உங்க பி எஃப் அக்கவுண்டில் 10 லட்ச ரூபாய் இருந்தால் சென்ற ஆண்டை விட இவ்வாண்டு 1000 ரூபாய் அதிக வட்டி கிடைக்கும்.

சேம நல நிதி நிறுவனம் வரும் தொகையில் ஒரு பகுதியை பங்குச் சந்தை முதலீடுகளில் வைத்தாலும் முழுப்பணத்துக்கும் 8.65% வட்டி வழங்கும். இதை இன்னும் விரிவுபடுத்தி பயனர்கள் தம்முடைய பணத்தில் எத்தனை சதவீதம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்யும் வசதியை வழங்க இருக்கிறது.

சேமநல நிதியில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்

1. நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு அதாவது மாதாந்திர சம்பளத்திலிருந்து வரும் பங்களிப்புக்கு செக்சன் 80சி யின் கீழ் வருமானவரி விலக்கு உண்டு

2. வரும் வட்டிக்கும் வருமான வரி கிடையாது

3. பேசிக் பே எனும் அடிப்படை சம்பளத்தின் 12% நீங்கள் சேமித்தால் நீங்கள் வேலைசெய்யும் நிறுவனமும் 12% அளிக்க வேண்டும். நீங்க 12% மேல் சேமித்தாலும் நிறுவனம் 12% மட்டுமே அளிக்கும்

4. நிறுவனம் அளிக்கும் 12 % இல் 8.33% EPS – எம்ப்ளாயி பென்சன் திட்டத்துக்குப் போகும். இதிலிந்ந்து 58 வயதுக்கு அப்புறம் பென்சன் வழங்கப்படும்

5. நிறுவனம் வழங்கும் 12% லிருந்து 0.5% ஆயுள் காப்பீட்டுக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது, இதிலிந்து 2.5 லட்சம் முதல் 6 லட்சம் வரை ஆயுள் காப்பீடும் வழங்கப் படுகிறது

6. இ பி எஃப்பில் நீங்கள் செலுத்தும் பணம் வருமான வரி ஏதும் இல்லாமல் வளந்து கொண்டே வரும். இதனை நீங்க ரிட்டையர் ஆகும் போது பெற்றுக் கொள்ளலாம்

7. பிள்ளைகளின் கல்வி, திருமணம், வீட்டுக் கடன் போன்ற காரணங்களுக்காகத் தேவைப்படும் போது சேமநல நிதியிலிருந்து பணத்தை எடுக்க முடியும்

8. வேலையிழப்பு ஏற்பட்டால் இருக்கும் தொகையிலிந்து 75% வரை எடுக்க முடியும்

9. மத்திய அரசின் உத்தரவாதம் இருப்பதால் இது மற்ற எந்த முதலீட்டையும் விட அதிக பாதுகாப்பானது

கட்டும் பணத்துக்கும் வருமான வரி விலக்கு, அது தரும் வட்டிக்கும் வருமான வரி விலக்கு, 8.65% வட்டி, பாதுகாப்பானது, குறைந்த செலவில் ஆயுள் காப்பீடு எல்லாமே இதுல இருக்கு. பொதுவா காப்பீட்டு நிறுவனங்களின் எண்டோமெண்ட் பாலிகள் 5% அளவிலேயே ரிட்டர்ன் அளிக்கின்றன, அவற்றில் ஒரு போதும் பெரிய அளவு காப்பிடு (சம் அஸ்யூர்ட்) பெற முடியாது. அப்புறம் நான் என்னதுக்கு இந்த ஜீவன் டேஷ் பாலிசில பணம் போடணும்? அதுக்குப் பதிலா குறைந்த செலவில் கோடி ரூபாய்க்கு டெர்ம் பாலிசி எடுத்துட்டு முதலீட்டுக்கு மியூச்சுவல் ஃபண்டையோ அல்லது எம்ப்ளாயி ப்ராவிடெண்ட் ஃபண்டையோ அல்லது இரண்டையுமோ தேர்ந்தெடுக்கலாமேன்னு நினைக்கறீங்களா? அதைத்தான் நானும் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்.

எண்ணமும் எழுத்தும்

திரு ஸ்ரீராம் நாராயணன்
பாஸ்டன் – அமெரிக்கா
(Visited 39 times, 1 visits today)
+1
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close