செய்திகள்விளையாட்டு

ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டி 20, ஒருநாள் போட்டிகள் என இரு தொடர்களையும் கைப்பற்றி உள்ளது. ஒருநாள் தொடரில் 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்று உள்ளது.

 

இன்று நடந்த ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா9 விக்கெட்டுகளை இழந்து  272 ரன்களைக் குவித்தது. காவாஜா சதமடித்தார். 100 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் பந்தில் கோலியிடம் பிடிபட்டார். ஹாண்ட்ஸ் கொம்ப் 52 ரன்களை எடுத்தார். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

 

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிக பட்சமாக ரோஹித் சர்மா, புவனேஸ்வர் குமார் இருவரும் முறையே 56, 46 ரன்களை எடுத்தனர். கேதார் ஜாதவ் 44 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றது. ஒருநாள் போட்டிக்கான தொடரையும் கைப்பற்றியது.

 

 

(Visited 14 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close