உளவுத்துரைகளைக் காட்டிக்கொடுத்த அன்சாரி துரை – 1
பிரகாஷ் ராமசாமி அவர்களின் முகநூல் பதிவு.
ரா உளவுத்துறை.
============
முதல்ல உளவுத்துறை ஆபீஸர்கள் எல்லோரும் நம்ம வடிவேலு.. ஒசாமாட்ட பேசுறியா அதிகாரி மாதிரி இருக்க மாட்டார்கள். வத்தலாக அல்லது.. மிகவும் சாதாரண மனிதர்களாகத்தான் இருப்பார்கள். போலீஸ் கட், நல்ல பைசப்ஸ்.. இப்படி இருந்தா சாதாரண ஆசாமிக்கும், அசாதாரணமான சந்தேகம் வரும்.
இந்த ஹமீத் அன்சாரி பற்றி முதன் முதல்ல.. சொன்னது R K யாதவ் என்கிற RAW அதிகாரி. அவர் பொஸ்தகத்துல நிறைய மேட்டர் இருக்கு. அதில் மிக முக்கியமான விஷயங்களை சொல்லிட்டு.. அன்சாரிக்கு போகிறேன்..
1995 இல் ஆறு வெளிநாட்டு டூரிஸ்டுகளை ஜே& கே தீவிரவாதிகள் கடத்தினார்கள். RAW வின ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்.. துல்லியமான தகவலை தலைமையகத்திற்கு அனுப்பியது. ஆனால் இதை பிரதமர் அலுவலகத்திற்கு தெரிவிக்க காலம் தாழ்த்தப்பட்டது. பிரதமர் நரசிம்மராவ் தெற்கில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு.. திரும்பி.. நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டபோது.. தீவிரவாதிகள் இடம் மாறிவிட்டிருந்தனர். ஆனால் இவர்களை பிடித்த அல்-ஃபரான் கும்பல் பிணைக்கைதிகளில் அனைவரையும் போட்டுத்தள்ளிவிட.. ஒருவர் மட்டும் தப்பி வந்தார். ஒன்பது நாட்களுக்கு பின்.. பிணைக்கைதிகளை பிடித்த தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது.
இவர்கள் வைத்த கோரிக்கை மசூத் அசர் என்கிற தீவிரவாதியை விடுதலை செய்ய.. ஆனால் வைத்த கோரிக்கை தோல்வியில் முடிந்தது..
இ
24/12/1999 IC-814 விமானம் கடத்தப்படலாம்னு.. முதலில் சொன்னது சிங் என்கிற அதிகாரி. இந்த கடத்தலுக்கு முன், ஐந்து தினங்களுக்கு முன்னரே, இந்த தகவலை.. தன் சீனியர் ஒரு ஆசாமியிடம் தெரிவித்தார். அந்த சீனியர் ஆசாமி.. இந்த தகவல் எவ்வளவு உறுதின்னு கேட்டபோது.. இது மிகவும் நம்பகமான ஒரு அதிகாரியிடம் இருந்து கிடைத்த தகவல் என்றதை.. இந்த அதிகாரி கேட்டுவிட்டு.. இதை ரா வின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப மறுத்துவிட்டு.. யாதவை.. திட்டி.. இந்த மாதிரி கிசு கிசுல்லாம் ஏன் மேன் அனுப்புறன்னு திட்டினார். திட்டினாரா..? திட்டினபின்.. இதே அதிகாரி கடத்தப்பட்ட விமானத்தில் பயணித்து மாட்டிக்கொண்டார். இவர் பெயரை வெளிப்படுத்தியிருந்தால்.. தீவிரவாதிகள் அன்றைக்கே போட்டுத்தள்ளி இருப்பார்கள். காலக்கொடுமை என்பது இதுதான்.. இந்த MISSION RAW என்கிற புத்தகத்தில் பலதும் வருகிறது. இந்த கடத்தலின் பிணைய கோரிக்கையில் மசூத் அசாரை விடுவித்தது இந்திய அரசு.
சரி ஹன்சாரிக்கு வருவோம்..இந்த ஹன்சாரியை து. ஜ க்கு முன்மொழிந்தது சீதாராம் எச்சூரி.. என்கிற கம்யூனிஸ்ட். இந்த தேசம் அழிய கம்யூனிஸ்டுகள், நக்ஸல்கள், மார்க்ஸிய-லெனினிஸ்டுகள் மட்டுமே போதும்…
(படித்துவிட்டு பகிருங்கள்.. பலருக்கும் தெரிய வரட்டும்)
தொடரும்…