புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஆதிதிராவிடர் காலனியில் வசிப்பவர் சண்முகம். இவரது மகள் மகாலட்சுமி (30)க்கும், அவரது காதலரான மோகனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
ஆரம்பத்தில் இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தாலும், இறுதியில் இருவீட்டாரும் கலந்து பேசி மோகனுக்கும், மகாலட்சுமிக்கும் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
மகா லட்சுமியின் வீட்டிற்கு வந்த மோகன் காதலியை நேற்றிரவு தைலமரக்காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெசிக்கொண்டிருந்த இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மோகன் உருட்டுக் கட்டையால் அடித்தே காதலியான மகாலட்சுமியைக் கொன்றுள்ளார்.
அதன் பின்னர், யாருக்கும் தன மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, தனக்குத்தானே சில காயங்களை உருவாக்கிக் கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த காவலர்கள் மோகனிடம் விசாரித்தனர்.
நானும், மகாலட்சுமியும் தைல மரக்காட்டில் பேசிக்கொண்டிருந்தபொழுது சில மர்மநபர்கள் என்னைத்தாக்கி விட்டு மகாலட்சுமியை கொன்றுவிட்டனர் என்று கூறியுள்ளார். ஆனால் இவரது பதிலில் சந்தேகம் அடைந்த போலீஸார் மோகனிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இறுதியில் தான் மகாலட்சுமியை உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொன்றாதாக ஒப்புக்கொண்டார்.
இந்தக் கொலையை மறைக்கவே தான் நாடகமாடியதையும் தெரிவித்துள்ளர். இதனையடுத்து காவலர்கள் மோகனைக் கைது செய்துள்ளனர்.
காதலியை காதலனே கொன்ற இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 13 times, 1 visits today)
0