கன்யாகுமரி மாவட்டத்தை சேர்ந்த புகழ் பெற்ற கவிஞர் ,எழுத்தாளர் தேசிக விநாயகம் பிள்ளை.இவர் கன்யாகுமரி மாவட்டம் ,தோவாளை தாலுக்காவில் உள்ள தேரூரில் பிறந்தவர்.
இவரது புகழ் பெற்ற படைப்புகள் – நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் , ஆசிய ஜோதி , மலரும் மலையும் போன்றவை.
1940 ம் ஆண்டு சென்னையில் நடந்த 7வது தமிழ் சங்கத்தில் இவருக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கப்பட்டது .2005 ஆம் ஆண்டு கவிமணியின் தபால்தலை மத்திய அரசால் வெளியிடப்பட்டது .
இவருக்கான உரிய மரியாதையும், அங்கீகாரமும் இதற்கு முன் இருந்த அரசுகள் கொடுக்கவில்லை என்ற எண்ணம் கன்யாகுமரி மாவட்ட மக்களுக்கு எப்போதுமே இருக்கிறது என்ற நிலையில் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களுக்கு, கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில், ரூ.1 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும என்ற அறிவிப்பை வெளியிட்டார்.