நாடு திரும்பும் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் – பிசிசிஐ அதிரடி நடவடிக்கை
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததைப் பகிர்ந்து கொண்டமைக்கும், பெண்களை இழிவு படுத்தியமைக்காகவும் இருவரையும் ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து அதிரடியாக நீக்கியதுடன் இருவரையும் உடனடியாக இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புமாறு கட்டளை இட்டுள்ளது பிசிசிஐ.
தன் வாழ்க்கையில் நடந்த அந்தரங்க விஷயங்களை எந்த வெட்கமுமின்றி பாண்டியா உளறித் தள்ளினார். அதே நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகை கரீனா கபூருடன் டேட்டிங், நடிகை பரினீத்தி சோப்ராவுடன் திருமணம், ஈஷா குப்தா, ஊர்வசி ரவுத்தாலாவுடன் உல்லாசம் என்று பாண்டியா கண்டபடி உளறினார். ராகுலும் தன் கதைகளைப் பகிர்ந்து கொண்டார்.
82 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட வீரர்களைத் திருப்பி அனுப்புவது இதுவே இரண்டாவது முறை. அணிக் கட்டுப்பாட்டை மீறியதற்காகவும், திடலில் பொறுப்பின்மை காரணமாக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் நாடு திரும்பும் உத்தரவு 1936 க்குப் பிறகு இப்போதுதான் நடக்கிறது. லாலா அமர்நாத் என்ற கிரிக்கெட் வீரர் முன்பு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவரின் பேச்சுக்கும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் ஹர்பஜன் சிங். இவர்களின் பேச்சால் மற்ற வீரர்களையும் பொது மக்கள் தவறாக நினைக்கக்கூடும் என்று கருத்துரைத்துள்ளார்.