செய்திகள்விளையாட்டு

3வது ஒருநாள் போட்டி; இந்தியா 32 ரன்களில் தோல்வி

இந்தியா -ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான 3 வது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 32 ரன்களில் இந்தியாவை வீழ்த்தியது.

முதலாவது பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பின்ச் மற்றும் காவாஜா இருவரும் முறையே 93,104ரன்களை முறையே குவித்தனர். இவர்கள் இருவரும் வலுவான அடித்தளத்தை ஆஸி. அணிக்கு அமைத்துக் கொடுத்தனர். மாக்ஸ்வெல் தமது பங்கிற்கு 47 ரன்களை எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா  50 ஓவர்களில்  313/5 ரன்களை எடுத்தது.

 

இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்தியா 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் வீராத் கோலி 123 ரன்களை எடுத்தார். விஜய் ஷங்கர் 32 ரன்களை எடுத்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸி. அணியில் கம்மின்ஸ், சாம்பா, ரிச்சர்ட்சன் மூவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த போட்டிக்குப் பிறகு  இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

(Visited 21 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close