இந்தியாசெய்திகள்

புதிய தலைமுறை சேனலின் கருத்துக் கணிப்பு முடிவுகள்

சி.என்.என் நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணிக்கு 263 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 76 தொகுதிகள் குறைவு. காங்., கூட்டணிக்கு 139 இடங்களும், மற்ற கட்சிகள் 141 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட காங்., 56 தொகுகளிலும், மற்ற கட்சிகள் 20 தொகுதிகளிலும் அதிக வெற்றிகள் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் 100 இடங்களைக் கூட பிடிக்காது என்பதே பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. பாஜகவிற்கும் காங்கிரசிற்கும் குறைந்தது 100-120 இடங்களாவது வித்தியாசம் இருக்கும் என கணித்துள்ளனர். கம்யுனிஸ்ட்களின் நிலைமை இன்னும் மோசம். கம்யுனிஸ்டுகளின் பங்களிப்பு இந்தத் தேர்தலில் இரட்டை இலக்க எண்ணுக்குப் போராடி வருகிறது என்பதே உண்மை.

 

தென் இந்தியாவை பொறுத்தவரை, மொத்தமுள்ள 129 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி 28, காங்., கூட்டணி 49 மற்றும் பிற கட்சிகள் 52 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில், திமுக கூட்டணிக்கு 21, அதிமுக கூட்டணிக்கு 12 மற்றும் அமமுக., கட்சிக்கு 6 தொகுதிகள் கிடைக்கும்.

 

இதுபோல் டிராங்கா டிவி நடத்திய கருத்துக்ணிப்பில் ; பா.ஜ.,கூட்டணி 222 முதல் 232 தொகுதிகளை பிடிக்கும் என்றும், காங்., கூட்டணி 115 முதல் 135 தொகுதிகளை பிடிக்கும் என்றும், மற்றவை 135 முதல் 155 தொகுதிகளை பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தேர்தல் கருத்துக்கணிப்பில் தமிழகத்தில்  திமுக கூட்டணிக்கு 31-33 தொகுதிகளும், அதிமுக கூட்டணிக்கு 3-6 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் மற்றும் தினகரன் கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றே இந்த கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பால் திமுக கூட்டணியினர் உற்சாகத்தில் உள்ளனர்.

(Visited 57 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close