இந்தியாசெய்திகள்

மீண்டும் உளறிய ராகுல் – நாங்கள் ஏற்படுத்திய பிரச்சினையை மோடி தீர்ககவில்லை

ஹரியாணா மாநிலம் பிவானி என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் ராகுல் காந்தி. அங்கே பேசும் போது வழக்கம் போல உளறினார். 2014ல் ஊழல், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனை இவற்றை சரி செய்ய நரேந்திர மோதி தேர்தெடுக்கப்பட்டார் என்று பேசினார்.

ராகுல் பேசியதாவது:

“2014ல் தனது பெரும் பிரச்சனைகளான வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனை, ஊழல் இவற்றோடு சண்டை போட்டு சரி செய்ய நரேந்திர மோதி என்ற குத்துச்சண்டை வீரரை தேர்ந்தெடுத்தது. அவர் தன் பயிற்சியாளர் அத்வானி, தன் அணியில் உள்ள கட்கரி, ஜெட்லி போன்றோரிடம் சண்டை போடுகிறார்.

பண மதிப்பிழப்பு, GST என்று பார்வையாளர்களான வியாபாரிகளை அடித்துவிட்டார். வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனை, ஊழல் இவற்றோடு சண்டை போடவில்லை.” என்று பேசினார்.

கூட்டத்துக்கு வந்திருந்த கிராமவாசிகள் பலரும் இதை ரசிக்கவில்லை. மோதி நன்றாக ஆட்சி செய்கிறார், இந்த ஆள் சும்மா பேசுகிறார் என்று பலரும் சொன்னார்கள். “இவர் சொல்வதை அப்படியே வைத்துக்கொண்டு பார்த்தால் 2014 தேர்தலில் முக்கியப் பிரச்சனைகளான வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனை, ஊழல் இவற்றை பத்து வருடங்கள் ஆண்ட காங்கிரஸ் ஏற்படுத்தியது. மோடி அவற்றை எதிர்த்து போராடினார். ஆனால்  பத்தாது, இன்னும் அதிகம் போராடவேண்டும் இதுதானே? மோடிஜி செய்வார்.” என்று பல இளைஞர்கள் கூறினர்.

சொந்தக்காசு போட்டு சூனியம் வைத்துக்கொண்டு அதற்கும் மோடியைத் திட்டுவதில் ராகுலை மிஞ்ச ஆளில்லை.

(Visited 27 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close