செய்திகள்பொருளாதாரம்

உள்ளூர் செய்தி நிறுவனங்களுக்கு 300 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது முகநூல் நிறுவனம்

உள்ளூர் செய்திகளை வழங்க, உள்ளூர் செய்தி  நிறுவனங்களுக்கு 300 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது முகநூல் நிறுவனம்.  இத்தொகை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் தொகையாகும். நிறைய உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்க உள்ளூர் செய்தி நிறுவனங்களுடன், அமைப்புகளுடன் பங்குதாரராகவும்  இருந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.

மக்களுக்கு உள்ளூர் செய்திகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பதாகவும், செய்திஅறைக்கு உள்ளூர் செய்திகளை உடனக்குடன் அளிக்க உதவி தேவைப்படுவதாலும் முதலீடு செய்ய முகநூல் நிறுவனம்  முன்வந்துள்ளது.

முகநூல் நிறுவனம் போலவே கூகிள் கூட அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செய்தி நிறுவனங்களுக்கு உதவி செய்ய 300  மில்லியன் டாலர்களை செய்தி நிறுவனங்களுக்கு வழங்குவதன் வாயிலாக தரமான செய்திகளைத்  தருவது, நிலையான வணிக மாடலை உருவாக்குவது , புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நியூஸ் அறையை மேம்படுத்துவது போன்றவை நடக்கும் என்றது கூகிள் தெரிவித்துள்ளது.

(Visited 53 times, 1 visits today)
0
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close