சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்ஜோதிடம்

15-04-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

Related image                                                                                
இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு
ஸ்ரீ விகாரி வருஷம் சித்திரை மாதம் 2ஆம் நாள், ஏப்ரல் 15ஆம் தேதி திங்கட்கிழமை
ஏகாதசி திதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.40 மணி வரை
மகம் நக்ஷத்திரம் நாள் முழுவதும்
ராகுகாலம் : காலை 7.30 – 9.00
எமகண்டம் : மதியம் 10.30 – 12.00
நல்ல நேரம்: காலை 6.30 – 7.30 மாலை 4.30 – 5.30
சூலம் : கிழக்கு
ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:
அஸ்வதி:
பணவரவு இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். காரிய தாமதம் தடைகள் ஏற்படும். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். உஷ்ண சம்பந்தமான வியாதிகள் சற்றே சிரமப்படுத்தும். எதிலும் பெரிய பாதிப்புகள் இருக்காது.
பிள்ளையார் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பரணி:
அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்
அம்பாள் வழிபாடு அல்லல்களைத் தீர்க்கும். “ஸுதா ஸிந்தோர் மத்யே” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி எட்டாவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதியில் “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
கார்த்திகை:
நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் கவனம் அவசியம். உடல் நலனில் கவனம் அவசியம்.
முருகனை வழிபட முத்தான நாளாகும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.
ரோகிணி:
யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.
அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.   “ஸுதா ஸிந்தோர் மத்யே” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி எட்டாவது பாடலைப் பாராயணம் செய்வது,  அபிராமி அந்தாதியில் “சென்னியது உன்பொன் திருவடித்தாமரை” எனத் தொடங்கும் ஆறாவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
மிருகசீர்ஷம்:
அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்
ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
திருவாதிரை:
யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உடல் நலனில் கவனம் அவசியம்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு துன்பங்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
புனர்பூசம்:
வேண்டிய பணி/இடமாற்றம், ஊதிய/ பதவி உயர்வு, மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைத்தல் ஆகிய நல்ல நிகழ்வுகளுக்கு வாய்ப்புண்டு. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.
தக்ஷிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பூசம்:
யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உடல் நலனில் கவனம் அவசியம்.
சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கி நாளைச் சீராக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ஆயில்யம்:
அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்
பெருமாள் வழிபாட்டால் பிரச்சனைகள் தீரும். விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்லது. திவ்யப்ரபந்த பாடல்கள் (தெரிந்தவற்றை) பாராயணம் செய்வது நலம் பயக்கும்.
மகம்:
உடல் நலனில் கவனம் அவசியம். உஷ்ண சம்பந்தமான சிக்கல்கள் இருக்கும். உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்கு வாதம் வேண்டாம். அவசியமற்ற விஷயங்களில் கருத்துச் சொல்ல வேண்டாம். வாக்கு கொடுப்பது தேவையில்லை. பயணங்களில் எச்சரிக்கை அவசியம். அநாவசிய செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் அவசியம்.
கணபதி வழிபாடு நன்மைகளைத் தரும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.
பூரம்:
நண்பர்கள் உதவி கிட்டும்.  புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது
அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். “ஸுதா ஸிந்தோர் மத்யே” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி எட்டாவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதியில் “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
உத்திரம்:
எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும்.  சமுதாயத்தில் மதிப்பு உயரும் நாள். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும் நாளாக உல்ளது.
சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ஹஸ்தம்:
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நீண்ட நாள்பட்ட சிக்கலைத் தீர்க்க முயற்சி மேற்கொள்வீர்கள்.  வெளி இடங்களில் பிரச்சனைகள் பெரிதாவது போல இருந்தாலும் உங்களுக்கு பாதிப்பு இருக்காது. யாருக்கும் ஆலோசனை கூறவேண்டாம். பெரிதாகுமோ என்று பயந்த ஒரு பிரச்சனை பாதிப்பின்றி ஒன்றுமில்லாமல் மறைந்து போய் நிம்மதி தரும். காரிய தாமதங்கள் இருந்தாலும் இறுதியில் காரியங்கள் சிறப்பாக முடியும். புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்று வருவீர்கள்.
அம்பாள் வழிபாடு அல்லல்களைக் குறைக்கும். அபிராமி அந்தாதியில் “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” எனத் தொடங்கும் நான்காவது பாடலைப் பாராயணம் செய்யவும், “ஸுதா ஸிந்தோர் மத்யே” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி எட்டாவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
சித்திரை:
வேண்டிய பணி/இடமாற்றம், ஊதிய/ பதவி உயர்வு, மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைத்தல் ஆகிய நல்ல நிகழ்வுகளுக்கு வாய்ப்புண்டு. புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
ஸ்வாதி:
கடன் கொடுக்க வாங்க வேண்டாம். எதிர்பார்த்த பணி ஒன்று நிறைவேறத் தாமதமாகும். பேச்சில் கவனம் அவசியம். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்கவும். இயந்திரப்பணியாளர்கள் கவனத்துடன் பணி செய்யவேண்டும். யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். பொது நிகழ்வுகள், அரசியல் குறித்து கருத்துக் கூற வேண்டாம்
ஸ்ரீதுர்க்கை வழிபாடு நன்மையை அதிகரித்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
விசாகம்:
நண்பர்களால் உதவி கிட்டும். நீண்டகால நண்பரைச் சந்தித்து அதன் மூலம் புதிய திருப்பம் ஒன்று ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் கவனம் அவசியம். ஆடை அணிகலன் சேர்க்கை உண்டாகும்.
முருகனை வழிபட சிக்கல்கள் தீரும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.
அனுஷம்:
பணவரவு இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். மறதியால் காரிய தாமதம் தடைகள் ஏற்படும் என்பதால் கவனம் அவசியம்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.
கேட்டை:
அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும்
சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
மூலம்:
யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.
பிள்ளையார் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பூராடம்:
அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும்
அம்பாள் வழிபாடு அனைத்து நன்மைகளையும் தரும்.  “ஸிவ ஸக்த்யா யுக்த்யோ” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி முதலாவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதியில் “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
உத்திராடம்:
கடன் கொடுக்க வாங்க வேண்டாம்.  பேச்சில் கவனம் அவசியம். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்கவும். இயந்திரப்பணியாளர்கள் கவனத்துடன் பணி செய்யவேண்டும். உடல்ந்லனில் கவனம் தேவை. யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம்.  அரசியல் குறித்து நேரில் விவாதிப்பதோ சமூக ஊடகங்களில் கருத்துக் கூறவோ வேண்டாம்
சிவபெருமான் வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
திருவோணம்:
உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம். உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்கு வாதம் வேண்டாம். அவசியமற்ற விஷயங்களில் கருத்துச் சொல்ல வேண்டாம். வாக்கு கொடுப்பது தேவையில்லை. பயணங்களில் எச்சரிக்கை அவசியம்
அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.  “த்வதன்ய பாணிப்யாம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
அவிட்டம்:
நண்பர்கள் உதவி கிட்டும்.  புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது
துர்க்கை வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
சதயம்:
பணவரவு இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். காரிய தாமதம் தடைகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு இருக்க வாய்ப்புள்ளதால் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
தீயபலன்களின் தாக்கம் குறைய துர்க்கை வழிபாடு அவசியம். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
பூரட்டாதி:
அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர். வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. நண்பர்களால் உதவி கிட்டும்
தக்ஷிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் கூடும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
உத்திரட்டாதி:
யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். பணவரவு இருக்கும்.
சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ரேவதி:
அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்
பெருமாள் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும்.  விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்லது. திவ்யப்ரபந்த பாடல்கள் (தெரிந்தவற்றை) பாராயணம் செய்வது நலம் பயக்கும்.
ஸ்ரீ மாத்ரே நம:
சுபம்
𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎
(Visited 60 times, 1 visits today)
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close