செய்திகள்தமிழ்நாடு

குடியரசுத் தலைவர் இந்தி பிரசார சபா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வருகை; மகாத்மா காந்தி சிலையையும் திறந்து வைக்கிறார்

இன்று  சென்னையில் உள்ள  இந்தி பிரசார சபாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  வருகிறார்.

இருநாள் பயணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தரவுள்ளார்.

அதன்படி, சென்னை தி.நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று ராம்நாத் கோவிந்த பங்கேற்கிறார். அப்போது, மகாத்மா காந்தி சிலையை அவர் திறந்து வைக்கிறார்.

அதற்குப் பிறகு , ஆந்திரப்பிரதேசம்  செல்லும் ராம்நாத் கோவிந்த் அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என ராஷ்ட்ரபதி பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

(Visited 34 times, 1 visits today)
+1
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close