செய்திகள்தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது உறுதி – சூசகமாகத் தெரிவித்த தேமுதிக -அதிமுக

சென்னை: நேற்று துரைமுருகன் , தேமுதிக தங்களைக் கூட்டணிக்கு அணுகியதாகவும் , ஆனால் தங்களது கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் இடங்களை ஏற்கனவே ஒதுக்கி விட்டதால் தேமுதிகவிற்கு ஒதுக்க இயலாது என்று துறை முருகன் தெரிவித்ததாக நேற்று செய்திகள் உலா வந்தன.

 

இன்று இதை மறுத்துப் பேசிய தேமுதிக, தாங்கள் நேற்று தனிப்பட்ட முறையில் தான் சந்தித்தோம், திமுக தான் தேவையில்லாமல் இதில் கருத்துரைக்கிறது. மேலும் தான் திமுகவிடம் பத்து நாட்களுக்கு முன்பாக தேர்தல் கூட்டணி குறித்துப் பேசியது உண்மைதான், ஆனால் நேற்றல்ல என்று சுதிஷே தெரிவித்து உள்ளார்.

 

மேலும் அவர் கூறுகையில், இன்னும் ஓரிரு தினங்களில் அதிமுகவுடனான  கூட்டணி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துவிடும் என்று சுதீஷ் கூறி உள்ளார். இதனால் தேமுதிக அதிமுக அணியில் தான் இருக்கும் என்பதும், தனித்து நிற்காது என்பதையும் சூசகமாகத் தெரிவித்து விட்டார்.

 

அதேபோல அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரும் , கூட்டணி பற்றி மற்ற கட்சிகள் மற்றவர்களிடம் பேசுவது வழக்கம் தான். இதில் ஒன்றும் தவறில்லை. மேலும் தேமுதிகவிற்கான கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. அவர்கள் வந்தால் மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்து இருப்பதால் தேமுதிக அதிமுக , இரு தரப்பும் கூட்டணியில் சேரும் என்பது தெரிகிறது.

(Visited 30 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close