வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் அதிமுகவும் காங்கிரசும் நேருக்கு நேர் மோதுகிறது. அதிமுக சார்பில் தற்போதைய எம்.பியாக உள்ள செஞ்சி வே.ஏழுமலையும் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.கே.வேணுபிரசாத்தும் மோதுகின்றனர்.
எம்.கே.வேணுபிரசாத் காங்கிரஸ் 2014 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட போது 27,000 வாக்குகளை மட்டுமே வாங்கி உள்ளார். போளூர், ஆரணி, செய்யூர், வந்தவாசி, செஞ்சி, மயிலம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது ஆரணி மக்களவைத் தொகுதி.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக, போளூர், ஆரணி, செய்யூர் ஆகிய தொகுதிகளிலும், வந்தவாசி, செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாமக , தேமுதிக வாக்கு வங்கியைக் கூட்டினால் அதிமுக பலம் வாய்ந்த அணியாக உள்ளது.
தேர்தலில் எந்த அணி வெற்றி பெரும் வாய்ப்பைக் கொண்டுள்ளது என்பதற்கான எனது தரப்பு பார்வையை இந்த லிங்கில் சென்று படிக்கலாம்.
2016 சட்டசபை தேர்தலில் அதிமுக அணி பெற்ற வாக்குகள் 5,72,000
2016 சட்டசபை தேர்தலில் திமுக அணி பெற்ற வாக்குகள் 4,99,000
அதிமுக அணியின் வெற்றி வாக்கு வித்தியாசம் 73,000 !!!
அதிமுக திட்டவட்டமாக வெற்றி பெறும் தொகுதிகளில் ஆரணி நிச்சயமாக இருக்கும். ஆகவே ஆரணி அதிமுக வெற்றி பெறும் என்பதே எனது கணிப்பு. தேர்தல் முடிவில் பார்க்கலாம்.