இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு
ஸ்ரீ விகாரி வருஷம் வைகாசி மாதம் 19ஆம் நாள், ஜூன் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
மாலை 5.00 வரை சதுர்த்தசி பிறகு அமாவாஸ்யை
நள்ளிரவு 01.19 வரை கார்த்திகை நக்ஷத்திரம் பிறகு ரோகிணி
ராகுகாலம் : மாலை 4.30 – 6.00
எமகண்டம் : மதியம் 12.00 – 1.30
நல்ல நேரம்: காலை 6.30 – 7.30 மாலை 3.30 – 4.30
சூலம் : மேற்கு
ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:
அஸ்வதி:
தொழிலில் லாபம் இருக்கும். செல்வாக்கு கூடும் நாள். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகைச் சூடுவார்கள். பணவரவு இருக்கும் நாள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும்.
பிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பரணி:
பணம் வரும் நாள். பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். நினைத்த காரியம் நடந்தேறும். தொழிலில் நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும்.
அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
கார்த்திகை:
நீண்ட நாள் தொல்லை கொடுத்துவந்த பிரச்சனைகள் தீரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். பழைய கடன்பாக்கி வசூலாகும். நண்பர்களால் உதவி கிட்டும். எதிர்கால முன்னேற்றத்துகான திட்டங்களைச் செயல்படுத்த உகந்த நாள்.
முருகனை வழிபட அல்லல்கள் தீரும், நன்மை பெருகும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.
ரோகிணி:
வேண்டிய பணியிட மாற்றம்/ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்செய்திகள் வர வாய்ப்புண்டு. அலுவலகப் பணிகள் வெற்றிகரமாக முடியும். நண்பர்களால் உதவி கிட்டும். நீண்ட காலச் சிக்கல் ஒன்றைத் தீர்த்து பாராட்டுப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினர் பாராட்டுப் பெறுவர்.
அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
மிருகசீர்ஷம்:
அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும். கலைத்துறையினர் வெற்றி வாகை சூடுவார்கள்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நலம் சேர்க்கும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
திருவாதிரை:
நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். பண வரவு இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தம் கைகூடும். அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நீண்ட நாள் வாட்டிய பிரச்சனை முடிவுக்கு வந்து நிம்மதி பெறுவீர்கள்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
புனர்பூசம்:
கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். பணம் வரும் நாள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்காலத்திட்டம் ஒன்று தீட்டுவீர்கள். அது வெற்றிகரமாக அமையும்.
தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீர்ந்து நலம் பெருகும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பூசம்:
பணம் வரும் நாள். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கிச் சீரான நாளாக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ஆயில்யம்:
நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது
ஸ்ரீதுர்க்கையை வழிபட நன்மைகள் பெருகும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
மகம்:
அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த நல்ல செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.
கணபதி வழிபாடு நன்மைகள் சேர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.
பூரம்:
சற்றே கவலையான விஷயம் குறித்து தீர்வு கண்டு மகிழும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.
அம்பாள் வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
உத்திரம்:
நண்பர்கள் உதவி கிட்டும். வேலைக்காகக் காத்திருப்போருக்கு வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில், நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். பயணங்களால் நன்மை ஏற்படும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும். பிறருக்கு நீங்கள் கூறும் ஆலோசனை வெற்றி/லாபம் தரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள்.
சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ஹஸ்தம்:
பிறருக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனைகளால் அவர்களுக்கு வெற்றி கிட்டும். உங்கள் மதிப்பு உயரும். அதனால் மன மகிழ்ச்சி ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். பணவரவு இருக்கும். பொழுதுபோக்கு, கேளிக்கை விஷயங்களில் கலந்து கொள்வீர்கள்.
அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி சிறப்புகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
சித்திரை:
மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பண வரவு குறித்த செய்தி வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு கூடும். குடும்பத்துடன் குதூகலமாக நேரம் கழிப்பீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
ஸ்வாதி:
நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். பண வரவு இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தம் கைகூடும். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
விசாகம்:
எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள்.நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
முருகனை வழிபட அல்லல்கள் அகன்று நலம் பெறலாம். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.
அனுஷம்:
செல்வாக்கு கூடும் நாள். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். எடுத்த முயற்சிகள் கைகூடும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பணம் வரும் நாள். தொழிலில் லாபம் இருக்கும். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.
ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களை நீக்கி நல்ல நாளாக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.
கேட்டை:
பணம் வரும் நாள். பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். நினைத்த காரியம் நடந்தேறும். தொழிலில் நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
மூலம்:
முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும்.
பிள்ளையார் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
பூராடம்:
நண்பர்கள் உதவி கிட்டும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும். திருமணம்/குழந்தைப் பேறுக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். விற்பனைத் துறையினர் இன்றைய இலக்கை அடைவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் உங்களை நம்பி ஒப்படைக்கப்படும். செவ்வனே செய்து பாராட்டுப் பெறும் நாளாக உள்ளது
அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
உத்திராடம்:
எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள்.நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கி நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
திருவோணம்:
தொழிலில் லாபம் இருக்கும். செல்வாக்கு கூடும் நாள். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகைச் சூடுவார்கள். பணவரவு இருக்கும் நாள். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். கடன் பாக்கி வசூலாகும்.
அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி சிறப்புகளைச் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
அவிட்டம்:
கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். அலுவலகத்தில் பதவி, ஊதிய உயர்வு குறித்த செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்களால் உதவிகள் கிட்டும். எடுத்த முயற்சிகள் கைகூடும்.
ஸ்ரீ துர்க்கை வழிபாடு அல்லல்களை நீக்கி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
சதயம்:
நீண்ட நாள் இழுபறியான ஒரு விஷயம் குறித்து நல்ல முன்னேற்றமான தகவல் வரும் நாள். நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.
ஸ்ரீ துர்க்கை வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
பூரட்டாதி:
நண்பர்கள் உதவி கிட்டும். வெளி வட்டாரப் பழக்கம் நன்மை தரும். நினைத்த காரியம் நடந்தேறும். தொழிலில் நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்திடுவீர்கள். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள்.
தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீரும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
உத்திரட்டாதி:
அலுவலகத்தில் வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும். மகனுக்கோ மகளுக்கோ திருமணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றமான செய்தி வரும். விற்பனைத் துறையில் உள்ளோர் இன்றைக்கான இலக்கை எளிதில் எட்டுவார்கள். பணவரவுக்கு இடமுண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.
ரேவதி:
அலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவி கிட்டும். தொழில்துறையினருக்கு நல்ல லாபம் கிட்டும். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகை சூடுவார்கள். புதிய வீடு, ஃப்ளாட், இடம் ஏதாவது ஒன்று முன்பதிவு செய்ய அல்லது வாங்க வாய்ப்புள்ளது. சமூக அந்தஸ்து கூடும் நாள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
ஸ்ரீ துர்க்கை வழிபாடு நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.
ஸ்ரீ மாத்ரே நம:
சுபம்
𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎