செய்திகள்ஜோதிடம்

27-05-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்

Related image                                                                               

 

இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு

ஸ்ரீ விகாரி வருஷம் வைகாசி மாதம் 13ஆம் நாள், மே 27ஆம் தேதி திங்கட்கிழமை

காலை 11.16க்குப் பிறகு நவமி திதி

மாலை 4.18 வரை சதயம் நக்ஷத்திரம் பிறகு பூரட்டாதி

ராகுகாலம் : மாலை 7.30 – 9.00

எமகண்டம் : மதியம் 10.30 – 12.00

நல்ல நேரம்: காலை 6.30 – 7.30 மாலை 3.30 – 5.30

சூலம் : கிழக்கு

ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:

அஸ்வதி:

மாலை 4.18 வரை:

நண்பர்கள் உதவி கிட்டும். கலைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் பாராட்டும் விருதும் பெற வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும் நாள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நீண்ட நாள் பாக்கி வசூலாகும்.

மாலை 4.18க்கு பிறகு:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.

பிள்ளையார் வழிபாடு பெருமை சேர்க்கும். விநாயகர் அகவல் படிக்கலாம், கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பரணி:

மாலை 4.18 வரை:
உடல் நலனில் கவனம் தேவை. பெரியோரிடம், குறிப்பாக தகப்பனாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். கோபம் வந்தால் யாரிடமும் பேசவேண்டாம். தடுமாற்றங்கள் இருக்கும் நாளாகத் தெரிவதால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படவும். அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.

மாலை 4.18க்கு பிறகு:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் மதிப்புக் கூடும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிர்கால முன்னேற்றத்துக்கான திட்டம் ஒன்றை நண்பர் உறவினர் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

கார்த்திகை:

மாலை 4.18 வரை:
எடுத்த முயற்சிகள் கைகூடும். குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். விளையாட்டுத்துறையினர் வெற்றி வாகைச் சூடும் நாளாகத் தெரிகிறது. குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து குதூகலம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.

மாலை 4.18க்கு பிறகு:

பணம் வரும் நாள். பயணங்களின் போது குறிப்பாக பர்ஸ் விஷயத்தில் கவனம் தேவை. பிறர் பிரச்சினைகளில் தலையிடவேண்டாம். வாக்கு வாதம் யாரிடமும் வேண்டாம். கடன் கொடுப்பது வாங்குவதைத் தவிர்க்கவும். செல்ஃபோன், கம்பியூட்டர் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை.

முருகனை வழிபட அல்லல்கள் தீரும், நன்மை பெருகும். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

ரோகிணி:

மாலை 4.18 வரை:

யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம். மனக்குழப்பங்கள் ஏற்படும் நாளாக இருப்பதால் நன்கு யோசித்துச் செயல்படவும். பெரியோரிடம், குறிப்பாக தாய் தந்தையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

மாலை 4.18க்கு பிறகு:

எடுத்த முயற்சிகள் கைகூடும். குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். விளையாட்டுத்துறையினர் வெற்றி வாகைச் சூடும் நாளாகத் தெரிகிறது. குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து குதூகலம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மிருகசீர்ஷம்:

மாலை 4.18 வரை:

நீண்ட காலப் பிரச்சனை முடிவுக்கு வரும். எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நல்ல திட்டம் ஒன்று தீட்டுவீர்கள். அதில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கதவு தட்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சமூகத்தில் செல்வாக்கு கூடும் நாள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

மாலை 4.18க்கு பிறகு:

உடல் நலனில் கவனம் தேவை. பெரியோரிடம், குறிப்பாக தகப்பனாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். கோபம் வந்தால் யாரிடமும் பேசவேண்டாம். தடுமாற்றங்கள் இருக்கும் நாளாகத் தெரிவதால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படவும். அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நலம் சேர்க்கும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

திருவாதிரை:

மாலை 4.18 வரை:

இயந்திரப் பணியாளர்கள் வேலையில் கவனம் தேவை. அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணம் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும்.

மாலை 4.18க்கு பிறகு:

முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். ஆடைகள், ஆபரணங்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எடுத்த முயற்சிகள் எல்லாம் கைகூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகும்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

புனர்பூசம்:

மாலை 4.18 வரை:

தொழிலில் லாபம் இருக்கும். செல்வாக்கு கூடும் நாள். கலைத்துறையினர் பாராட்டப்படுவார்கள். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். வக்கீல்கள் வழக்குகளில் வெற்றி வாகைச் சூடுவார்கள். பணவரவு இருக்கும் நாள்.

மாலை 4.18க்கு பிறகு:

பணம் வரும் நாள். புதிய ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். குடும்பத்துடன் சுற்றுலா அல்லது பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்குச் சென்று மகிழ்வீர்கள்.

தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீர்ந்து நலம் பெருகும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூசம்:

மாலை 4.18 வரை:
கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த நல்ல செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள். பணம் வரும்.

மாலை 4.18க்கு பிறகு:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வராக்கடன் வசூலாகும். திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வரும். பணம் வரும் நாள். எதிர்காலத்திட்டம் ஒன்று தீட்டுவீர்கள், அது வெற்றிகரமாக அமையும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கிச் சீரான நாளாக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ஆயில்யம்:

மாலை 4.18 வரை:

யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். மறதியால் காரிய தாமதம் தடைகள் ஏற்படும் என்பதால் கவனம் அவசியம்.

மாலை 4.18க்கு பிறகு:

பண வரவு குறித்த செய்தி வரும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு கூடும். குடும்பத்துடன் குதூகலமாக நேரம் கழிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். முக்கியப் புள்ளிகள், நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகளை முடித்து நிம்மதி பெறுவீர்கள். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஸ்ரீதுர்க்கையை வழிபட நன்மைகள் பெருகும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

மகம்:

மாலை 4.18 வரை:

மறதியால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்பிருப்பதால் முக்கிய விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். பயணங்களில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் அவசியம். அலைச்சல் இருக்கும்.

மாலை 4.18க்கு பிறகு:

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளவும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாகப் பேசவும். வாக்கு வாதங்கள் வேண்டாம். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். சமூக ஊடகங்களில் கருத்துச் சொல்வது விவாதிப்பதைத் தவிர்க்கவும்.

கணபதி வழிபாடு நன்மைகள் சேர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாராயணம் செய்வது, கணேச பஞ்சரத்னம் படிப்பது நன்மை தரும்.

பூரம்:

மாலை 4.18 வரை:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். சக ஊழியர் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் தாக்கம் இருக்கும். உடல் நலனில் கவனம் அவசியம்.

மாலை 4.18க்கு பிறகு:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்.

அம்பாள் வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நன்மைகளை அதிகரிக்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

உத்திரம்:

மாலை 4.18 வரை:

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நீண்ட நாளைய கடன்பாக்கி வசூலாகும். பணவரவு இருக்கும். உறவினர் நண்பர்களிடையே இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி பொங்கும் நாளாக அமைகிறது. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கதவு தட்டும்.

மாலை 4.18க்கு பிறகு:

உடல் நலனில் கவனம் தேவை. கூரிய பொருட்களைக் கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. வயதில் மூத்தோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். மறதியால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால் முக்கியப்பணிகளில் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படவும். உடல் நிலைகுறித்து கவனம் கொள்வது நல்லது.

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ஹஸ்தம்:

மாலை 4.18 வரை:

மறதியால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்பிருப்பதால் முக்கிய விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். பயணங்களில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் அவசியம். அலைச்சல் இருக்கும்.

மாலை 4.18க்கு பிறகு:

எடுத்த முயற்சிகள் கைகூடும். தங்கம், வெள்ளி நகை, பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து குதூகலம் அதிகரிக்கும். நோய்களின் தாக்கம் குறையும். எதிர்ப்புகள் விலகும். புதுத் தெம்பு ஏற்படும்.

அம்பாள் வழிபாடு சிக்கல்களை நீக்கி சிறப்புகள் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சித்திரை:

மாலை 4.18 வரை:

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த நல்ல செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள். பணம் வரும் நாள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

மாலை 4.18க்கு பிறகு:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். குடும்பத்தினரிடம் கோபப்படவோ, வாக்குவாதம் செய்யவோ வேண்டாம். பொறுமை அவசியம். பயணங்களின் போது கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். கூர்மையான பொருட்களைக் கையாளும் போது கவனம் தேவை.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு அல்லல்களை அகற்றி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஸ்வாதி:

மாலை 4.18 வரை:

பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அவசியமற்ற விஷயங்களில் கருத்துச் சொல்ல வேண்டாம். காரியத் தாமதங்கள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும். மொத்தத்தில் செயல்பாடுகளில் கவனம் தேவை.

மாலை 4.18க்கு பிறகு:

சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். நண்பர்களால் உதவிகள் கிட்டும். எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து தேவையான பணிகளை முடித்துக் கொள்வீர்கள். வராக்கடன் வசூலாகும். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும் நாள். குடும்பத்துடன் குதூகலமாக நேரம் செலவிட்டு மகிழ வாய்ப்புள்ளது.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு சிக்கல்களைத் தீர்த்து நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

விசாகம்:

மாலை 4.18 வரை:

வராக்கடன் வசூலாகும். சுபச்செலவுகள் ஏற்படும். சற்றே இழுபறியில் இருந்த வேலைகள் நல்ல முடிவுக்கு வந்து மகிழ்ச்சி தரும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். சமூகத்தில் செல்வாக்கு கூடும்.

மாலை 4.18க்கு பிறகு:

யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம். மனக்குழப்பங்கள் ஏற்படும் நாளாக இருப்பதால் நன்கு யோசித்துச் செயல்படவும். பெரியோரிடம், குறிப்பாக தாய் தந்தையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

முருகனை வழிபட அல்லல்கள் அகன்று நலம் பெறலாம். ஸுப்ரமணிய புஜங்கம், கந்த சஷ்டி கவசம், குமாரஸ்தவம் இவற்றில் ஏதாவது ஒன்றை மனம் ஒன்றிப் படிக்க நன்மை நடக்கும்.

அனுஷம்:

மாலை 4.18 வரை:
அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியம் கூடும்

மாலை 4.18க்கு பிறகு:

முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். புதிய ஆடைகள், நகைகள் வாங்கி மகிழ்வீர்கள்.

ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல்களை நீக்கி நல்ல நாளாக்கும். ஹனுமன் சாலீஸா படிப்பது, சுந்தரகாண்டம் (கதை அல்லது ஸ்லோகங்கள்) படிப்பது மகிழ்ச்சி தரும்.

கேட்டை:

மாலை 4.18 வரை:

மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். பணிச்சுமை கூடும் நாளாக உள்ளது. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்களின் போது கவனம் அவசியம். தொழிற்சாலைகளில் குறிப்பாக இயந்திரங்களில் பணியாற்றுவோர் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

மாலை 4.18க்கு பிறகு:

பணம் வரும் நாள். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் பாராட்டுப் பெறுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து நல்ல செய்தி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் நாள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்காலத்திட்டம் ஒன்று தீட்டுவீர்கள். அது வெற்றிகரமாக அமையும்.

ஸ்ரீதுர்க்கை வழிபாடு நிம்மதி தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

 

மூலம்:

மாலை 4.18 வரை:

உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் வாக்கு வாதம் வேண்டாம். அவசியமற்ற விஷயங்களில் கருத்துச் சொல்ல வேண்டாம். வாக்கு கொடுப்பது தேவையில்லை. பயணங்களில் எச்சரிக்கை அவசியம். அநாவசிய செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் அவசியம்.

மாலை 4.18க்கு பிறகு:

புதிய முயற்சிகள் தள்ளிப் போடவும். இயந்திர சாதனங்களில் பணியாற்றுவோருக்கு கவனம் தேவை. பயணங்களில் கவனம் அவசியம். நண்பர்கள், உறவினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். காரிய தாமதங்கள் இருக்கும். மொத்தத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.

பிள்ளையார் வழிபாடு பிரச்சனைகளைத் தீர்க்கும். விநாயகர் அகவல் படிப்பது, கணேச பஞ்சரத்னம் பாராயணம் செய்யலாம். கணபதி அதர்வசீர்ஷ உபநிஷத் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

பூராடம்:

மாலை 4.18 வரை:

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளவும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாகப் பேசவும். வாக்கு வாதங்கள் வேண்டாம். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். சமூக ஊடகங்களில் கருத்துச் சொல்வது விவாதிப்பதைத் தவிர்க்கவும்.

மாலை 4.18க்கு பிறகு:

நீண்ட காலப் பிரச்சனை முடிவுக்கு வரும். எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நல்ல திட்டம் ஒன்று தீட்டுவீர்கள். அதில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கதவு தட்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சமூகத்தில் செல்வாக்கு கூடும் நாள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி நன்மைகள் சேர்க்கும். “க்வணத் காஞ்சீ தாமா” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி ஏழாவது பாடலைப் பாராயணம் செய்வது, “மனிதரும் தேவரும் மாயா முனிவரும்” அபிராமி அந்தாதி நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

உத்திராடம்:

மாலை 4.18 வரை:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் மதிப்புக் கூடும் நாள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிர்கால முன்னேற்றத்துக்கான திட்டம் ஒன்றை நண்பர் உறவினர் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாளைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

மாலை 4.18க்கு பிறகு:

அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணம் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும். உடல் நிலை சோர்வடையும். கவனம் தேவை.

சிவபெருமான் வழிபாடு சிக்கல்களை நீக்கி நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

திருவோணம்:

மாலை 4.18 வரை:

புதிய முயற்சிகளை ஒத்தி போடவும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளவும். சக ஊழியர்களிடம் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பயணங்களின் போது குறிப்பாக பர்ஸ் விஷயத்தில் கவனம் தேவை.

மாலை 4.18க்கு பிறகு:

அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலைகள் வெற்றிகரமாக முடியும். பணவரவு இருக்கும். நீண்ட நாள் தொல்லை கொடுத்துவந்த பிரச்சனைகள் தீரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூக அந்தஸ்து கூடும் நாள். கலைத்துறையினருக்கு பாராட்டு/விருது கிடைக்கும். விளையாட்டுத்துறையினர் வெற்றி வாகைச் சூடும் நாளாகத் தெரிகிறது.

அம்பாள் வழிபாடு அல்லல்களை அகற்றி சிறப்புகளைச் சேர்க்கும். “தனோது க்ஷேமம்” எனத் தொடக்கும் ஸௌந்தர்யலஹரி நாற்பத்து நான்காவது பாடலைப் பாராயணம் செய்வது, அபிராமி அந்தாதி “மணியே மணியின் ஒளியே” எனத் தொடங்கும் 24ஆவது பாடலைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

அவிட்டம்:

மாலை 4.18 வரை:

நண்பர்களின் உதவிகள் கிட்டும். போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கு வெற்றி கிட்டும். நேர்முகத் தேர்வில் சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்புண்டு. விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களிடையே மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தினர், நண்பர்களிடையே நீண்ட நாள் கருத்து வேறுபாடுகள் விலகும். கலைத்துறையினருக்குப் பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும்.

மாலை 4.18க்கு பிறகு:

மறதியால் சிக்கல்கள் வர வாய்ப்பிருப்பதால் முக்கியப்பணிகளில் கவனத்துடன் செயல்படவும். பயணங்களில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் அவசியம். அலைச்சல் இருக்கும். யாரிடமும் கோபத்தைக் காட்ட வேண்டாம். எல்லோரையும் அனுசரித்துச் செல்வது நாளுக்குச் சிறப்பு சேர்க்கும்.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு அல்லல்களை நீக்கி நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

சதயம்:

மாலை 4.18 வரை:

யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். மேலதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். பயணங்களின் போது கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் கவனம் அவசியம். பொதுவில் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நாள்.

மாலை 4.18க்கு பிறகு:

பண வரவு குறித்த செய்தி வரும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு கூடும். குடும்பத்துடன் குதூகலமாக நேரம் கழிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். முக்கியப் புள்ளிகள், நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகளை முடித்து நிம்மதி பெறுவீர்கள். வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு நன்மை தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

பூரட்டாதி:

மாலை 4.18 வரை:

எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும்.

மாலை 4.18க்கு பிறகு:

கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த நல்ல செய்திகள் கிடைத்து மனம் மகிழ்ச்சி அடையும். சமூக அந்தஸ்து கூடும் நாள். நண்பர்கள் சந்திப்பு மூலம் வேண்டிய பணிகள் முடிந்து பெருமை அடைவீர்கள். பணம் வரும் நாள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

தக்ஷிணாமூர்த்தியை வழிபட சிக்கல்கள் தீரும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

உத்திரட்டாதி:

மாலை 4.18 வரை:

நண்பர்களால் உதவி கிட்டும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். பயணங்களில் நன்மை ஏற்படும். பணவரவு இருக்கும். நீண்டநாள் பாக்கி வசூலாகும். வியாபாரத்தில் லாபகரமான செய்தி வரும். புதிய ஒப்பந்தம் ஒன்றைப் பேசி முடிப்பீர்கள். நல்ல செய்திகள் வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

மாலை 4.18க்கு பிறகு:

எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். குடும்பத்துடன் புண்ணியத் தலங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று நல்லவிதமான முடிவுக்கு வரும். அதனால் பாராட்டுப் பெறுவீர்கள். பணம் வரும் நாள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி லாபத்துக்கு அடிகோலும்.

சிவபெருமான் வழிபாடு நாளைச் சீராக வைத்திருக்கும். கோளறு திருப்பதிகம், சிவபுராணம் படிப்பது நன்மை தரும். ஸ்ரீருத்ரம் பாடம் இருப்போர் பாராயணம் செய்யலாம்.

ரேவதி:

மாலை 4.18 வரை:

பயணங்களில் கவனம் அவசியம். வெளி இடங்களில் சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும். அரசியல் விமர்சனம், கருத்து விவாதம் ஆகியவை சிக்கல்களை அதிகரிக்கும். பொது இடங்களில் மணிப்பர்சில் கவனம் வையுங்கள்.

மாலை 4.18க்கு பிறகு:

வராக்கடன் வசூலாகும். சுபச்செலவுகள் ஏற்படும். இழுபறியில் இருந்த வேலைகள் நல்ல முடிவுக்கு வந்து பாராட்டுப் பெறுவீர்கள். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். சமூகத்தில் செல்வாக்கு கூடும். உங்களது அருமை பிறருக்கு புரியவரும் நாளாக இருக்கும்.

ஸ்ரீ துர்க்கை வழிபாடு நலம் தரும். ஸ்ரீ துர்க்கா ஸூக்தம், ஸ்ரீ துர்க்கா சந்திரகலா ஸ்துதி, அயிகிரி நந்தினி இவற்றில் பாடம் இருக்கும் ஸ்துதியைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஸ்ரீ மாத்ரே நம:

சுபம்

𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎

(Visited 56 times, 1 visits today)
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close