பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.
தனக்குத் துன்பம் தரும் செயலைச் செய்யும் பகைவர்க்குத் துணையிருப்பவரை அவர்மாட்டுப் பிரித்தலும், தம்மிடம் உள்ளோரின் உணர்வறிந்து காத்தலும், தம்மை விட்டுப் பிரிந்து சென்றவர்களை தம்பக்கம் தக்க சமயம் பார்த்துச் சேர்த்தலும் அறிந்த வல்லமை பெற்றவரே ஆலோசனை வழங்க ஏதுவான அமைச்சராவர்.
(Visited 27 times, 1 visits today)