வரும் மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் மோதுகின்றன. தஞ்சையில் திமுக சார்பாக எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் களம் இறங்கி உள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக என்.ஆர்.நடராஜன் உள்ளார். தமிழ் மாநில காங்கிரசுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தஞ்சை லோக்சபா தொகுதி மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவுரணி, தஞ்சாவூர் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளடக்கியது. இதில் மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு பேராவுரணி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
அமமுக தினகரனின் சொந்த ஊரான மன்னார் குடியும் தஞ்சை லோக்சபா தொகுதிக்குள் வருகிறது. அமமுக இத்தொகுதியில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பிரிக்கும். இயல்பாகவே திமுக வலிமையாக உள்ள இத்தொகுதியில், அமமுக பிரிக்கும் வாக்குகள், தமாகாவின் அறிமுகமில்லாத சின்னம், திமுகவின் பலம் வாய்ந்த வேட்பாளர் என திமுகவிற்கு சாதகமான தொகுதியாக உள்ளது.
1977,2014 ஆகிய தேர்தலில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 1951 முதல் 2014 வரை நடந்த 16 லோக்சபா தேர்தலில் திமுகவும் , காங்கிரசும் வென்ற தொகுதி ஆகும். அதிலும் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் 1996 முதல் 2014 வரை இத்தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு திமுக சார்பில் வென்று உள்ளார். தொகுதி மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர் திமுக வேட்பாளரான பழனி மாணிக்கம்.
தேர்தலில் எந்த அணி வெற்றி பெரும் வாய்ப்பைக் கொண்டுள்ளது என்பதற்கான எனது தரப்பு விஷயங்களை இந்த லிங்கில் சென்று படிக்கலாம்.
தஞ்சை நிலவரம்: (தஞ்சை சட்டசபை தொகுதி நீங்கலாக மற்ற ஐந்து சட்டசபை தொகுதிகளில் இரு அணிகளும் பெற்ற வாக்குகள்)
2016 சட்டசபை தேர்தலில் அதிமுக அணி பெற்ற வாக்குகள் 4,27,000
2016 சட்டசபை தேர்தலில் திமுக அணி பெற்ற வாக்குகள் 4,30,000
திமுக அணியின் வெற்றி வாக்கு வித்தியாசம் 3,000 !!! ஆனால் தற்போதைய தஞ்சை கள சூழல் திமுகவிற்கு சாதகமான தொகுதியாக உள்ளது.
திமுக திட்டவட்டமாக வெற்றி பெறும் தொகுதிகளில் தஞ்சாவூர் நிச்சயமாக இருக்கும். ஆகவே தஞ்சாவூரில் திமுக வெற்றி பெறும் என்பதே எனது கணிப்பு. தேர்தல் முடிவில் பார்க்கலாம்.