பெங்களூரு: மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கட்சிகள் அவர்களுள்ளே உள்ள பகையால் இந்த ஆட்சி வீழும் என்று பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான முரளிதர் ராவ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
கர்நாடகாவில் காங்,- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி தற்போது நடக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக இது அமைந்தது. அதிக இடங்களைப் பெற்றும் பாஜகவால் மெஜாரிட்டிக்குத் தேவையான 112 எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தால் மெஜாரிட்டி நிருபிக்க இயலாமல் ஆட்சியை விட்டு இறங்கியது. பிரதான எதிர்கட்சியான பா.ஜ.வுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது மொத்தமுள்ள 224 இடங்களில் இக்கூட்டணிக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரசிடம் 80 எம்.எல்.ஏ.க்களும் மதச்சார்பற்ற ஜனதா தளத்திடம் 37 எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி கட்சியான பிஎஸ்பியிடம் ஒரு எம்.எல்.ஏவும் உள்ளது.
இன்று இரு சுயேட்சை சட்டசபை உறுப்பினர்கள் ஜேடிஎஸ் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காங்கிரசின் 6 சட்டசபை உறுப்பினர்கள் பாஜவிடம் தொடர்பில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. கர்நாடக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு கடந்த இரு தினங்களாக அரங்கேறி வருகிறது.