செய்திகள்தமிழ்நாடு

மதமாற்றத்தைத் தடுத்தற்காக படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்திற்காக இதுவரை 34,33,716 ரூபாய் உதவித்தொகை பிரிந்துள்ளது

திருபுவனம் ராமலிங்கத்தை இஸ்லாமிய மதமாற்றத்தைத் தடுத்தார் என்பதற்காக நான்கு தினங்களுக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்டார். இதற்கு கடும் கண்டனங்களை இந்து அமைப்புகளும், சமூக வலைத்தளங்களிலும், பாஜக, பாமக போன்ற கட்சிகளும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முகமது ரியாஸ், சர்புதீன், நிஜாமுதீன், அசாருதீன், ரிஸ்வான்,முஹம்மது தவ்ஃபீக், முகம்மது ஹபீஸ் , சையத் பாட்சா, இப்ராஹீம் ஆகிய ஒன்பது  பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அவருடைய குடும்பத்திற்காக உதவித் தொகை கோரினார்கள். இந்து சமயத்தைக் காப்பாற்ற , மதமாற்றத்தைத் தட்டிக் கேட்டு தன்னையே பலியாக்கிய ராமலிங்கம் குடும்பத்திற்கு 34,33,716 ரூபாய் தொகை இதுவரை கிடைத்துள்ளது. உதவித் தொகை செலுத்த விரும்புபவர்கள் இந்த லிங்கினை கிளிக் செய்து செலுத்தலாம்.

(Visited 83 times, 1 visits today)
+1
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close